இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீதான 15% வரி தொடரும்! அடங்காத டிரம்ப்

வாஷிங்டன், பிப் 25- இந்தியா உட்பட உலக நாடுகள் மீது டிரம்ப் ஏற்கெனவே பரஸ்பர வரியை விதித்திருந்தார். ஆனால், அந்த வரி சட்டவிரோதம் என்று அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும் மற்றொரு சட்டத்தை பயன்படுத்தி 15% வரியை விதித்திருக்கிறார். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், வரி விஷயத்தில் உறுதியாக இருப்பாக கூறியிருக்கிறார். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் ஆண்டுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற வேண்டும். இது நாட்டின் தற்போதைய நிலை, அரசின் சாதனைகள் மற்றும் வருங்காலத் திட்டங்களை விளக்கும் ஒரு அறிக்கை போன்றது. அந்த வகையில் இன்று அவர் உரையாற்றியிருந்தார். இந்த உரையில், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் ஈட்டிய வெற்றிகளைப் பட்டியலிட்ட டிரம்ப், அமெரிக்கா ஒரு புதிய பொற்காலத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். அதேபோல வரி விஷயத்தில் தான் உறுதியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.