இந்திய தொழிலதிபருக்கு லாட்டரி ரூபத்தில் அடித்த ரூ.8 கோடி

துபாய்: பிப்ரவரி 16-
லாட்டரியில் யாருக்கு எப்போது பரிசு அடிக்கும் என்பது தெரியாது. அந்த வகையில் துபாயில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக டிக்கெட் வாங்கி வந்த இந்தியாவை சேர்ந்த ராஜன் லால் என்பவருக்கு இதுவரை பரிசு அடிக்காமல் இருந்தாலும் தொடர்ந்து டிக்கெட் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் இந்திய மதிப்பில் ரூ.8 கோடி அவருக்கு லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. துபாயில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருபவர் ராஜன் லால். இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபரான ராஜன் லால் (வயது 79) பாலிவுட் திரைப்படங்களையும் தயாரித்து இருக்கிறார்.லாட்டரி வாங்கும் பழக்கம் ராஜன் லால் துபாயில் செட்டில் ஆனதில் இருந்தே அவருக்கு அங்கு விற்பனை செய்யப்படும் வரியில்லா லாட்டரி டிக்கெட்டை வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. இதுவரை அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு பரிசும் லாட்டரியில் கிடைக்கவில்லை. இருந்தாலும் என் ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறிவிடும் என நினைத்த ராஜன் லால் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டை வாங்கி வந்துள்ளார். 25 ஆண்டுகளாக லாட்டரி வாங்கியிருக்கிறார் 25 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் ராஜன் லால், ஆசை நிறைவேறியது. அவருக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8 – 9 கோடி) பரிசாக அடித்துள்ளது. மெல்லினியம் மில்லினர் சீரிஸ் 535ல் ராஜன் லால் டிக்கெட் வாங்கிய நிலையில், 3099 என்ற எண்ணிற்கு பரிசு அடித்துள்ளது.
ஏற்கனவே புற்று நோய் பாதிகப்பட்டு குணம் அடைந்த ராஜன் லாலுக்கு மூன்று முறை ஹார்ட் அட்டாக்கும் வந்துள்ளது. அண்மையில்தான் தனது 79-வது பிறந்த நாளை கொண்டாடிய ராஜன் லால், என்றாவது ஒருநாள் அதிர்ஷ்ட காற்று தட்டாமலா போய்விடும் என்ற எதிர்பார்ப்புடன் லாட்டரியை தொடர்ந்து வாங்கி வந்து இருக்கிறார்.ரூ.8 கோடி பரிசு அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.. கனவு நிறைவேறிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு ஒரே லாட்டரியில் ராஜன் லாலின் இத்தனை வருட ஏக்கத்தை போக்கியுள்ளது. ஆமாங்க.. ராஜன் லாலுக்கு லாட்டரியில் ரூ 8 கோடி பரிசாக அடித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார். லாட்டரியி ஒரு வழியாக பரிசு அடித்தது பற்றி பேசிய ராஜன் லால் கூறியதாவது:- “ஆண்டுக்கு ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்குவேன். கடந்த 25 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறேன். ஆனால், பெரிதாக பரிசு கிடைத்தது இல்லை. சமீபத்தில் கூட எனது நண்பரிடம் இதைப்பறி ஜோக் ஆக கூறினேன். நம்பமுடியாத அளவுக்கு இருந்தது பாலிவுட் திரையுலகில் உள்ள எனது நண்பர்களை சந்திக்க அண்மையில் மும்பைக்கு வந்தேன். அப்போது விமான நிலையத்தில் இந்த டிக்கெட்டை வாங்கினேன். சவுதி அரேபியாவில் நான் இருக்கும் போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பரிசு விழுந்ததாக கிடைத்த தகவலை கேட்ட அந்த தருணம் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது” என்றார்.