இரு வேறு விபத்து இரண்டு பேர் பலி

பெங்களூரு: செப். 26-
பனசங்கரி 2 வது ஸ்டேஜ் 10 வது பிரதான சாலை 13 வது குறுக்கு சாலை சந்திப்பில் நேற்று மாலை ஒரு துயர சம்பவம் நடந்தது.
ஸ்கூட்டரில் பத்மநாபநகருக்கு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிர் பக்கத்தில் இருந்து அதிவேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாக வாகனம் மோதியதில் ஒருவர் பலியானார்.
செய்தி கிடைத்தவுடன், பனசங்கரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தினர்.தேவனஹள்ளியில் உள்ள அகலகோட்டே அருகே உள்ள பெட்ரோல் பம்ப் அருகே அதிக வேகத்தில் சென்றதால் பைக் ஓட்டுநர் ஒருவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.செப்டம்பர் 23 ஆம் தேதி இரவு 8 மணியளவில் நடந்த விபத்தில் காயமடைந்து ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான கணேஷ் (20) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தேவனஹள்ளி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.