இலங்கை அதிபர் முதன்முறையாக கச்சத்தீவுக்கு பயணம்

ராமேசுவரம்: செப். 3- கச்​சத்​தீவு இலங்​கைக்​குரியது, அதை வேறு யாருக்​கும் விட்​டுக் கொடுக்க முடி​யாது என்று இலங்கை அதிபர் கூறி​யுள்​ளதற்​கு, அரசி​யல் கட்​சிகள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளன. இந்​திய அரசு கச்​சத்​தீவை இலங்​கைக்கு கொடுத்த பின்னர், கடந்த 51 ஆண்​டு​களில் முதன்​முறை​யாக இலங்கை அதிபர் கச்​சத்​தீவுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.யாழ்ப்​பாணம் மண்டை தீவில் புதி​தாக சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற இலங்கை அதிபர் அநுர குமார திசா​நாயக்க, பின்​னர் மண்​டைத்​தீவு, நயி​னாத் தீவு மற்றும் கச்​சத்​தீவு​களுக்​குச் சென்று பார்​வை​யிட்​டார்.இது தொடர்​பாக இலங்கை அதிபர் மாளிகை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “அதிபர் அநுர குமார திசா​நாயக்க யாழ்ப்​பாணத்​தில் உள்ள கச்​சத்​தீவுக்கு கண்​காணிப்பு பயணம் மேற்​கொண்​டார். அப்​போது இலங்கை மீன்​வளத்​துறை அமைச்​சர் ராமலிங்​கம் சந்​திரசேகர், பொது​மக்​கள் பாது​காப்பு மற்​றும் நாடாளு​மன்ற விவ​கார அமைச்​சர் ஆனந்த விஜே​பால, வடக்கு கடற்​படை கட்​டளை தளபதி ரியர் அட்​மிரல் புத்​திக லியனகமகே ஆகியோர் உடனிருந்​தனர்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
முன்​ன​தாக, யாழ்ப்​பாணத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசா​நாயக்க “கச்​சத்​தீவு இலங்​கைக்​குரியது, அதை வேறு யாருக்​கும் விட்​டுக் கொடுக்க முடி​யாது” – என்று தெரி​வித்​திருந்​தார். கச்​சத்​தீவு விவ​காரம் தொடர்​பான இலங்கை அதிபரின் பேச்​சுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், தவாக தலை​வர் த.வேல்​முரு​கன் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.