
முல்லான்பூர்: மே 31 –
2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் குவித்து சிறப்பாக ஆடி இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருந்தார். ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு அவர் பேசுகையில், தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பை வைத்து ரன் குவித்ததாகக் குறிப்பிட்டார்.இந்தப் போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி ரோகித் சர்மா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். இது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது நான்காவது அரை சதமாக அமைந்தது. இந்த ஆண்டுதான் வெறும் நான்கு அரை சதங்கள் மட்டுமே அடித்திருப்பதாக அதிருப்தியையும் வெளிப்படுத்தினார் ரோகித் சர்மா.