Home செய்திகள் உலக செய்திகள் உலகக்கோப்பையில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகல் த்ரில் வெற்றி

உலகக்கோப்பையில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகல் த்ரில் வெற்றி

டொராண்டோ: ஜூலை 3-
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் நாக்கவுட் போட்டியில், குரோஷியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகக் கோப்பை நாக்கவுட் சுற்றில் தனது முதல் கோலை அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். டொராண்டோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் போர்ச்சுகல் அணி பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்த போதிலும், கோல் அடிக்கத் தடுமாறியது. மைதானத்தில் குரோஷியா ரசிகர்கள் தொடர்ந்து ரொனால்டோவை கூச்சலிட்டு சீண்டினர். ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் முதல் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். அதனால் 2018-இல் ரன்னர்-அப் மற்றும் 2022-இல் 3-வது இடத்தைப் பிடித்த குரோஷியா இந்த முறை ரொனால்டோ அணியை வீழ்த்தி விடுமோ? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ரெனாடோ வைகாவை, குரோஷியாவின் விலாசிக் ஃபவுல் செய்ததால் போர்ச்சுகலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ மிக நேர்த்தியாக கோலாக மாற்றி ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். இதன் மூலம் உலகக் கோப்பை நாக்கவுட் போட்டியில் கோல் அடித்த மிக மூத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 81-வது நிமிடத்தில் ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து கூடுதல் நேரத்தின் 4-வது நிமிடத்தில், மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய கோன்சலோ ராமோஸ் ஹெட்டர் மூலம் கோல் அடித்து போர்ச்சுகலை 2-1 என முன்னிலை பெறச் செய்தார்.