உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் – பிரதமர் திறந்து வைத்தார்

ஸ்ரீநகர்: ஜூன் 6 –
உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி பாலத்தை இன்று (ஜூன் 06) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம், ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு உள்ளது.

  • 1,315 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் செனாப் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும் இது நில அதிர்வு மற்றும் காற்று சக்திகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
  • இந்த பாலம் கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் இணைப்பை மேம்படுத்தும். இது உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலம் ஆகும்.
  • இப்பாலத்தில் கடந்த ஜனவரி மாதம் வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் குளிர்சியான சூழலுக்கு ஏற்ப, இந்த வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த செனாப் பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.