உ.பி. யில் தமிழ் பாட வகுப்புகள்

வாராணசி: ஜனவரி 12-
உத்தர பிரதேசத்​தின் பள்​ளி​கள், கல்​லூரி​களில் தமிழ் பாட வகுப்​பு​களை தொடங்க அந்த மாநில அரசு திட்​ட​மிட்டு உள்ளது.
உத்தர பிரதேசத்​தின் வாராணசி​யில் கடந்த டிசம்​பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தமிழ் கற்​கலாம் என்ற கருப்​பொருளு​டன் காசி தமிழ்ச் சங்​கமம் 4.0 நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் முதல்​வர் ஆதித்​ய​நாத் பேசும்​போது, “உத்தர பிரதேச பாடத்​திட்​டத்​தில் தமிழ் உள்​ளிட்ட தென்​னிந்​திய மொழிகள் சேர்க்​கப்​படும்” என்று தெரிவித்தார்.
கடந்த டிசம்​பர் 28-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசும்​போது, “காசி தமிழ்ச் சங்​கமத்​தின் ஒரு பகு​தி​யாக வாராணசி​யின் குயீன் கல்​லூரியைச் சேர்ந்த மாணவி பாயல் படேல் தமிழ் மொழியை கற்று வரு​கிறார். வாராணசி​யின் 50-க்கும் மேற்​பட்ட பள்​ளி​களில் தமிழ் கற்​கலாம் என்ற சிறப்பு இயக்கம் நடத்தப்​பட்​டது. பிஜி தீவு முதல் காசி வரை மக்​களின் மனங்​களை தமிழ் ஒன்​றிணைக்​கிறது” என்று தெரி​வித்​தார்.
உ.பி. அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “பிரதமர் மோடி, முதல்​வர் ஆதித்​ய​நாத்​தின் முயற்​சி​யால் உ.பி. பள்​ளி​கள், கல்​லூரி​களில் தமிழ் பாட வகுப்​பு​களை தொடங்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. முதல் ​கட்​ட​மாக வாரணாசி பள்​ளி, கல்​லூரி​களில் தமிழ் வகுப்புகள் தொடங்​கப்​பட்டு வரு​கின்​றன. மேலும் வாரணாசியை சேர்ந்த 50 ஆசிரியர்​கள் தமிழகம் சென்று இந்தி பாட வகுப்புகளை நடத்த உள்​ளனர்” என்று தெரி​வித்​தன.