எலான் மஸ்க்கை வீட்டுக்கு அனுப்பிய டிரம்ப்

நியூயார்க், மே 31- அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற உதவி செய்த உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு அமெரிக்காவின் செயல்திறன் துறையை உருவாக்கி அதன் தலைவர் பொறுப்பை வழங்கினார். இதில் செயல்பட்டு வந்த எலான் மஸ்க் தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ள நிலையில் டிரம்ப் பிரியா விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எலான் மஸ்க். உலகின் பெரும் பணக்காரரான இவர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற ஏராளமான பணம் செலவழித்தார். அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும் எலான் மஸ்க்கிற்கு முக்கிய பொறுப்பை வழங்கினார் டிரம்ப். அமெரிக்காவின் செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக அவரை நியமித்தார். அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு, எலான் மஸ்க் கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி கொடுத்தார். தேர்தல் பிரசாரங்களுக்கு உதவி செய்தார். இந்த நன்றியை மறக்காத டொனால்ட் டிரம்ப், செயல்திறன் துறை என்று தனியே உருவாக்கி அதன் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார். இந்த செயல்திறன் துறையின் முக்கிய பணி என்பது அமெரிக்காவின் பொருளாதாரம், நிதி மேலாண்மையை மேற்கொள்வதாகும். அமெரிக்கா எங்கெல்லாம் தேவையில்லாமல் நிதி செலவு செய்கிறதோ, அதனை அறிந்து நடவடிக்கை எடுக்க டொனால்ட் டிரம்பிடம் பரிந்துரைப்பது தான். அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவின் USIAD மூலம் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் பல ஆயிரம் கோடி நிதி நிறுத்தப்பட்டது. மேலும் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் எலான் மஸ்க் தான். அவரது பரிந்துரையில் தான் டொனால்ட் டிரம்ப் அந்த நிதியை நிறுத்தி வைத்தார். அதோடு பல பணியாளர்களை வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பினார் எலான் மஸ்க்.