ஐயப்ப பக்தர்களுக்கான விபத்து காப்பீடு

குமுளி: அக். 29-
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்துக் காப்பீடு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்ப பக்​தர்​களுக்காக கடந்த ஆண்டு விபத்து காப்​பீ’ட்​டுத் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டது.
ஆனால், பத்​தினம்​திட்​டா, கோட்​ட​யம், இடுக்​கி, ஆலப்​புழை உள்​ளிட்ட பகு​தி​களில் ஏற்​படும் விபத்​துகளில் உயி​ரிழக்​கும் ஐயப்ப பக்​தர்​களின் குடும்​பங்​களுக்கு மட்​டுமே காப்​பீட்​டுத் தொகை ரூ.5 லட்​சம் வழங்​கப்​பட்​டது.
தற்​போது, இதன் எல்லை வரம்பு கேரள மாநிலம் முழு​வதும் விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.
இதுகுறித்து திரு​வி​தாங்​கூர் தேவஸ்​தான தலை​வர் பிர​சாந்த் கூறியதாவது: கேரள மாநிலத்​தில் எங்கு விபத்து நடந்​தா​லும், சம்​பந்​தப்​பட்ட பக்​தர்​களின் குடும்​பங்​களுக்கு ரூ.5 லட்​சம் காப்​பீடு வழங்​கப்​படும்.
மேலும், இறந்​தவர்​களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு​ செல்ல மாநிலத்​துக்​குள் ரூ.30 ஆயிர​மும், வெளி​மாநில பக்​தர்​களுக்கு ரூ.1 லட்​சம் வரை​யிலும் வழங்​கப்​படும். இதே​போல, சந்​நி​தானத்​துக்கு மலை ஏறிச்​செல்​லும்​போது உயி​ரிழந்​தால் ரூ.2 லட்​சம் வழங்கப்​படும். இந்த காப்​பீட்டு நிதிக்​காக ஆன்​லைன் தரிசன முன்​ப​திவு செய்​யும் பக்​தர்​களிடம் ரூ.5 பெறப்​படும். இவ்வாறு அவர் கூறினார்.