
கெய்ரோ, நவ. 12- உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 466.9 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் யுஹுன் லியு 467.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், பிரான்ஸின் ரோமெய்ன் ஆஃப்ரெர் 454.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். முன்னதாக நடைபெற்ற தகுதி சுற்றில் 24 வயதான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 597-40x புள்ளிகளை குவித்து உலக சாதனையை சமன் செய்திருந்தார்.




















