
பாரிஸ், நவ, 11- 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. இதன்படி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடர் முதல், பெண்கள் பிரிவில் திருநங்கை வீராங்கனைகள் பங்கேற்க முழுமையான தடை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வில், ஆணாகப் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் உடல் வலிமை மற்றும் ஆற்றல்,
அவர்கள் பாலின மாற்று ஹார்மோன் சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும் நீடிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. “பெண்கள் பிரிவைப் பாதுகாக்க வேண்டும்” என்ற தனது பிரசார வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில், அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மற்றும் சீன தைபேவின் லின் யூ-டிங் ஆகியோர் தங்கம் வென்றது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுவே இந்த ஆய்விற்கும், தடை குறித்த முடிவுக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஆய்வு முடிவை எலான் மஸ்க், “பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பு” என கிண்டலாகப் பதிவிட்டது வைரலானது.


















