
பெங்களூரு: ஜூன் 3-
தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது என்று கூறிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பேச்சு உரிமையை மற்றவர்களின் மனங்களை புண்படுத்த பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள நீதிமன்றம் கமல்ஹாசன் தனது கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கமல்ஹாசன் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த தனது பேச்சுரிமையை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது, மேலும் கன்னட மொழி “தமிழிலிருந்து பிறந்தது” என்ற கருத்தை திரும்பப் பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல 70 வயதான மிகப் பிரபலமான நடிகர் அரசியல் கட்சி தலைவர். என்று கூறிய நீதிபதிகள்
“உங்களுக்குப் பேச்சுரிமை உண்டு… ஆனால் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது. (சுதந்திரமான) பேச்சு மற்றும் கருத்துரிமையை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அளவிற்கு வழங்க முடியாது. இதை இப்போது உங்களிடமே விட்டுவிடுகிறோம்… நீங்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கும் முடிவை உங்களிடமே விட்டு வடுகிறோம் என்று நீதிமன்றம் கூறியது, வியாழக்கிழமை திரையிடப்படும் கமல்ஹாசனின் புதிய படமான ‘தக் லைஃப்’ படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாக சட்டபூர்வமாக அனுமதி வேண்டும் என்று வலியுறுத்தி கமல்ஹாசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் மேற்கண்டவாறு கூறியது.
இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டீர்கள். அந்த அறிக்கையைத் திரும்பப் பெறுங்கள்.அவ்வளவுதான். கர்நாடகாவிலிருந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். ஆனால் உங்களுக்கு (கன்னட மக்கள்) தேவையில்லை என்றால் வருவாயை விட்டுவிடுங்கள்
ஆனால், பொதுமக்களின் உணர்வுகளை யாரும் ஏமாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்… தவறுகள் நடக்கும்போது, ’இந்தச் சூழலில்தான் நான் பேசினேன் (ஆனால்) அது யாரையாவது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று சொல்ல வேண்டும்,” என்று நீதிமன்றம் நீதி நீதிமன்றம் கடுமையாக சாடி உள்ளது.தமிழ் தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கமலஹாசன் கூறி இருந்தார் இதற்கு கர்நாடக மாநிலத்தில் படும் எதிர்ப்பு ஏற்பட்டு போராட்டங்கள் நடந்து வருகிறது கமல்ஹாசன் உருவ பாடல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது .
குறிப்பாக கன்னட மாநில தொலைக்காட்சிகள் சமூக ஊடகங்களில் கமலஹாசன் எதிராக மக்கள் பொங்கி எழுந்து உள்ளனர் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு நடிகர் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது