Home செய்திகள் தேசிய செய்திகள் கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு

கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு

புதுடெல்லி, ஜூலை 23-
‘‘கோரிக்​கைகளை நிறைவேற்​றா​விட்​டால், எங்​களது அடுத்​தகட்ட போராட்​டம் பெரிய அளவில் இருக்​கும்’’ என்று கரப்பான் பூச்சி கட்​சி​யினர் (சிஜேபி) அறி​வித்​துள்​ளனர். இதனால் டெல்லி​யில் துணை ராணுவ படை வீரர்​கள் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.
நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி (சிஜேபி) கடந்த ஜூன் 28-ம் தேதி டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டத்​தைத் தொடங்​கியது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நாடாளு​மன்​றம் நோக்கி சிஜேபி கட்​சி​யினர், ஆதர​வாளர்​கள் பேரணி சென்​றனர். அப்​போது, போராட்​டக்​காரர்​கள் – போலீ​ஸார் இடையே தள்​ளு முள்ளு ஏற்​பட்​டது. போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும், கண்​ணீர் புகை குண்​டு​கள் வீசி​யும் கூட்​டத்​தைக் கலைத்​தனர். போராட்டக்காரர்களும் போலீஸார், துணை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கினர். போலீஸ் வாகனங்களைக் கவிழ்த்து சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், சிஜேபி செய்​தித் தொடர்​பாளர் அசுதோஷ் ரான்கா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, ‘‘சுதந்​திர இந்​தி​யா​வில் நடந்த போராட்​டங்​களில் இது​தான் மிகப்​பெரியது. கடந்த 20-ம் தேதி நடந்த போராட்​டம் வெறும் முன்​னோட்​டம்​தான் (டிரெய்​லர்). அடுத்​தகட்​ட​மாக எங்​களது போராட்​டம் மிகப்​பெரிய அளவில் இருக்​கும். மத்​திய அரசு எங்​கள் கோரிக்​கைகளை ஏற்​கா​விட்​டால், லட்​சக்​ கணக்​கான இளைஞர்​கள் டெல்​லியை நோக்கி வரு​வார்​கள். கைது நடவடிக்கைக்கும் தயா​ராக இருக்​கிறோம். எங்​கள் போராட்​டத்​துக்​குப் பாஜக உட்பட எந்த கட்சியினரும் ஆதரவு அளிக்கலாம்’’ என்றார்.சிஜேபி நிறு​வனர் அபிஜித் திப்கே நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், ‘‘கடந்த 25 நாட்களாக சமூக சேவகர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்துகிறார். இதுதொடர்பாகப் பிரதமர் மோடி இது​வரை வாய் திறக்​க​வில்​லை. அவர் தனது மவுனத்​தைக் கலைக்க வேண்​டும். பிரதமர் மோடி​யின் அரசி​யல் என்​பது வெறும் தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​களை நடத்​து​வதும் தேர்​தலில் வெற்றி பெறு​வதும் என்றே நினைக்​கிறார். மக்களுக்குப் பொறுப்​புட​னும் கடமை​யுட​னும் பதிலளிப்​பதும் அரசி​யல் கடமை​களில் ஒன்​று. நீட் விவகாரத்தில் பல மாணவர்கள் உயிரிழந்த பிறகும் கூட, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிர​தான் உங்களுக்கு ஏன் அவ்​வளவு முக்கியமானவராக இருக்​கிறார் என்​பதை நாட்​டுக்​குத் தெரிவியுங்​கள்’’ என்று தெரிவித்துள்ளார்.