Home மாவட்டங்கள் பெங்களூர் 8 ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில்கள்

8 ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில்கள்

சென்னை: ஜூன் 22-
சென்னை ஐசிஎஃப் ஆலை​யில் கடைசி​யான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்த நிலை​யில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு முழு​வீச்​சில் தொடங்க உள்​ளது. நடப்பு நிதி​யாண்​டில் 8 ஸ்லீப்​பர் வந்தே பாரத் ரயில்​களை தயாரிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.
உலகப் புகழ்​பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்​சாலைகளில் ஒன்​றான சென்னை ஐ.சி.எஃப். திகழ்​கிறது. இங்கு பல்​வேறு வகை​களில் 80 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ரயில் பெட்​டிகள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. தற்​போது, இந்த ஆலை​யில் அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்​பில் ஆர்​வம் காட்​டப்​படு​கிறது.
வந்தே பாரத் ரயிலைப் பொருத்​தவரை, ஐ.சி.எஃப்​-ல் முதன் முறை​யாக உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் “ரயில் 18” என்ற பெயரில் தயாரிக்​கப்​பட்​டது. இதற்கு “வந்தே பாரத் ரயில்” என்று பெயரிடப்​பட்​டது. இருக்கை வசதி கொண்ட இந்த ரயில் சேவை முதன்​முதலாக, புதுடில்லி – வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு தொடங்​கியது. தற்​போது நாட்​டின் பல்​வேறு நகரங்​களுக்கு இடையே 80-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.
பல்​வேறு வசதி​களை கொண்ட இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது. முன்​ன​தாக, ஐசிஎஃப் ஆலை​யில் இருக்கை வசதி​யுடைய 97 வந்தே பாரத் ரயில்​களை தயாரிக்க ஆர்​டர் வழங்​கப்​பட்​டது. இதுத​விர, தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பார்​சல் வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில், அம்​ரித் பாரத் ரயில் உள்​ளிட்ட வகை​களில் ரயில்​கள் தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டன.இவற்​றில் அம்​ரித் பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் அடுத்​தடுத்து தயாரித்து வழங்​கப்​பட்​டது. 16 பெட்​டிகள் கொண்ட தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெங்​களூரு​வில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறு​வனத்​தில் ஐ.சி.எஃப் பங்​களிப்​புடன் தயாரிக்​கப்​பட்​டது. இந்த ரயில் தற்​போது ஹவுரா (மேற்கு வங்​கம்) – காமாக்யா (கவு​காத்​தி, அசாம்) இடையே வழித்​தடத்​தில் இயக்​கப்​படு​கிறது. இதையடுத்​து, தூங்​கும் வசதி வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு பணியை அதி​கப்​படுத்த முயற்சி எடுக்​கப்​பட்​டது.
இந்​நிலை​யில், சென்னை ஐசிஎஃப் ஆலை​யில் கடைசி​யான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி அண்​மை​யில் நிறைவடைந்​தது. இனி வரும் காலங்​களில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரிப்பு முழு​வீச்​சில் நடை​பெறவுள்​ளன. அந்த வகை​யில், நடப்பு நிதி​யாண்​டில் 8 தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.