கலப்பட நெய் விவகாரம்திருப்பதி தர்மா ரெட்டியிடம் விசாரணை

திருப்பதி: ​நவ. 12-
திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சிக் காலத்​தில், டெண்​டர் மூலம் கலப்பட நெய் வாங்​கிய​து தொடர்​பாக சிபிஐ தலை​மையி​லான சிறப்பு விசா​ரணை குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது.
உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள போலே​பாபா ஆர்​கானிக் டெய்ரி நிறு​வனத்​திற்கு ஒப்​புதல் கொடுக்​கப்​பட்டு அவர்​கள் ரூ.250 கோடிக்கு 68 லட்​சம் கிலோ நெய்யை விநி​யோகம் செய்ய வேண்​டும். ஆனால், 2022-ல் இவர்​கள் விநி​யோகம் செய்த நெய் தரமற்​ற​தாக உள்​ள​தாக அப்​போதைய அறங்​காவல் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அவர்​களை பிளாக் லிஸ்​டில் வைத்​தா​லும், ஒரு லிட்​டர் பால் கூட தயாரிக்​காத இதே நிறு​வனம் தொடர்ந்து 2024 ஜூன் மாதம் வரை கலப்பட நெய்யை விநி​யோகம் செய்​துள்​ளது. இதுதொடர்பாக திண்​டுக்​கல் ஏஆர் டெய்ரி, திருப்​பதி வைஷ்ணவி டெய்ரி, உத்தர பிரதேசத்​தில் உள்ள மால் கங்கா டெய்ரி ஆகியோரிட​மும் சிறப்பு ஆய்வு குழு விசா​ரணை நடத்தி பலரை கைது செய்​துள்​ளது.
இந்​நிலை​யில், அந்த கால கட்​டத்​தில் நிர்​வாக அதி​காரி​யாக கோலோச்​சிய தர்​மாரெட்​டியை நேற்று சிறப்பு ஆய்வு குழு திருப்​ப​தி​யில் உள்ள அலு​வல​கத்​தில் வைத்து விசா​ரணை நடத்​தி​யது. நெய்​யின் தரத்தை எவ்​வாறு ஆய்வு செய்​தீர்​கள்? போலே​பாபா டெய்ரி நிறு​வனத்தை பிளாக் லிஸ்​டில் வைத்த பின்​னரும் எப்​படி அவர்​கள் மூல​மாகவே நெய் விநி​யோகம் ஆனது? பக்​தர்​கள் தொடர்ந்து லட்டு பிர​சாதம் குறித்து குற்​றச்​சாட்​டு​களை முன் வைத்​தும் ஏன் அவற்​றின் மீது நடவடிக்கை எடுக்​க​வில்​லை? என்​பது போன்ற பல கேள்வி​கள் தர்மா ரெட்​டி​யிடம் கேட்​கப்​பட்​ட​தாக தெரி​கிறது.