கலைஞர் உரிமை தொகை விரிவாக்கம்

சென்னை: ஜூன் 20-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் ஜூலை 15 முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 15 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், இரண்டு குறிப்பிட்ட பிரிவினருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகளிர் உரிமைத் தொகை யாருக்குக் கிடைக்காது? தற்போது தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், மேலும் 10 முதல் 15 லட்சம் பயனாளிகளைச் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 1.45 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் வாரத்தில் இதற்கான முகாம்கள் விண்ணப்பப் பணிகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு பெற்றவுடன் விண்ணப்பங்கள் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், சிலருக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, வார்டு உறுப்பினர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.ஆனால், மற்ற அதிகாரப் பதவிகளான கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மேயர்களின் மனைவிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட மாட்டாது. இரண்டாவதாக, அரசு மற்றும் கார்ப்பரேஷன் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், ரூ.3,000 பென்ஷன் போன்ற குறைந்த பென்ஷன் பெற்றாலும், அவர்களுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது. கலைஞர் உரிமைத் தொகை விரிவாக்கம் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த இரண்டு பிரிவினருக்கும் ரூ.1,000 கண்டிப்பாக வழங்கப்படாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.