பெலிகாவி,டிசம்பர் 26
காங்கிரஸ் கட்சியின் 1924 ஆம் ஆண்டு மாநாடு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாளை டிசம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில்
பெலகாவியில் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.இதை முன்னிட்டு நகரமே திருவிழா கோலம் பூண்டு உள்ளது மின் விளக்குகளால் ஜொலிக்கிறது அனைத்து சாலைகளிலும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன.இந்த மாநாட்டில் பங்கேற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.இது இந்தியாவில் புதிய ஒரு வரலாறை ஏற்படுத்தும் மாநாடாக இருக்கும் என்றும் இதில் 200 தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
அகிம்சை, ஒத்துழையாமை, அரசியல் சுதந்திரம், தீண்டாமை ஒழிப்பு, சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையை ஊக்குவித்தல், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து நீதியின் கொள்கையை வலுப்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் மகாத்மா காந்தி பெல்காமில் 1924 ஆம் ஆண்டு தனது உரையை வழங்கினார். இதை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் இந்த பிரமாண்ட மாநாடு நடத்தப்படுகிறது
“இந்த அமர்வின் 100 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், பெல்காவியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடத்தப்படுகிறது இதை ‘நவ் சத்தியாகிர பேதக்’ என்று அழைக்கப்படுகிறது. மகாத்மா காந்தி இந்தியத் தலைவராகப் பொறுப்பேற்ற அதே இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும். இந்த வரலாற்று சிறப்புமிக்க அமர்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) செய்து முடித்துள்ளது
நாளை 26 ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு மகாத்மா காந்தி நகரில் கூட்டம் தொடங்குகிறது
27ம் தேதி காலை, 11:30 மணிக்கு, பெலகாவியில், ‘ஜெய் பாபு-ஜெய் பீம்-ஜெய் சன்விதான்’ பேரணி நடக்கிறது. இதில், காங்., எம்.பி.,க்கள், ஏ.ஐ.சி.சி., நிர்வாகிகள், லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்கின்றனர்,”
இந்த கூட்டத்தில் பாஜக ஆட்சியின் கீழ் பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஜனநாயகத்தின் அரிப்பு மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட முக்கியமான சவால்கள் குறித்து விவாதிக்கப்படும். இது மகாத்மா காந்தியின் 100-வது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்கும் என்று இது கூறப்படுகிறது