காப்பீட்டு துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடு: மசோதாவுக்கு ஒப்புதல்

புதுடெல்லி, டிச. 13- இந்​திய காப்​பீட்டு துறை​யில் அந்​நிய நேரடி முதலீட்டை 100 சதவீத​மாக உயர்த்​து​வதற்​கான மசோ​தாவுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​துள்​ளது. மக்​களவை அறிக்​கை​யின்​படி, காப்​பீட்டு துறை​யில் முதலீட்டை அதி​கரிக்​க​வும், வளர்ச்சி மற்​றும் மேம்​பாட்டை துரிதப்​படுத்​த​வும், வணி​கம் செய்​வதை எளி​தாக்​கும் வகை​யில் காப்​பீட்டு சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2025 உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. நாடாளுமன்ற கூட்​டத்​தொடரில் அறி​முகம் செய்ய பட்​டியலிடப்​பட்ட 13 சட்​டங்​களில் இது​வும் ஒன்​றாகும். இந்த ஆண்டு பட்​ஜெட் உரை​யில், நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், புதிய தலை​முறை நிதித் துறை சீர்​திருத்​தங்​களின் ஒரு பகு​தி​யாக காப்​பீட்​டுத் துறை​யில் அந்​நிய முதலீட்டு வரம்பை தற்​போதுள்ள 74 சதவீதத்​திலிருந்து 100 சதவீத​மாக உயர்த்​தும் திட்​டத்தை முன்​மொழிந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ரூ.11,718 கோடி: 2027-ல் இந்​திய மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடை​பெறும் என்று மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. இந்​நிலை​யில், இந்த திட்​டத்​துக்​காக ரூ.11,718 கோடி நிதி ஒதுக்​கீடு செய்ய அமைச்​சரவை அனு​மதி அளித்​துள்​ள​தாக மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நேற்று தெரி​வித்​தார். இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “மக்​கள் தொகை கணக்​கெடுப்பு இரண்டு கட்​டங்​களாக நடத்​தப்​படும். 2026 ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரை வீட்​டுப் பட்​டியல் மற்​றும் வீட்​டு​வசதி கணக்​கெடுப்​பும், 2027 பிப்​ர​வரி​யில் மக்​கள் தொகை கணக்​கெடுப்​பும் நடத்தப்பட உள்​ளன’’ என்​றார். இவைத​விர, அணுசக்தி மசோ​தா​வின் கீழ் அணுசக்தி துறை​யில் தனி​யார் பங்​கேற்​புக்​கும் அமைச்​சரவை ஒப்​புதல் தெரி​வித்​துள்​ளது.