கும்ப மேளாவில் 60 பேர் உயிரிழந்தனர் – சித்தராமையா

பெங்களூர், ஜூன் 5- பெங்களூரில் நடந்த ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்ட விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்திருக்க கூட்டாது என்று தெரிவித்த சித்தராமையா, இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடந்துள்ளன. உத்தர பிரதேச கும்பமேளாவில் 60 பேர் உயிரிழந்தனர். அதை பற்றி நான் எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்று பேசினார். 18வது ஐபிஎல் சீசனில், பெங்களூர் அணி கோப்பையை வென்றது. 18 ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பையை ஆர்சிபி அணி வென்றுள்ளதால் இதனை கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் வெற்றி விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்தது. மேலும் பெங்களூர் நகரில் வெற்றி பேரணி நடத்தவும் திட்டமிட்டது. கட்டுக்கடங்காத கூட்டம் ஆனால் பெங்களூர் நகரம் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் என்பதால் பேரணி நடத்தினால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கடைசி நேரத்தில் பேரணி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் அணியின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பங்கேற்றனர். இந்த விழாவை காண ஏராளமான ஆர்சிபி ரசிகர்கள் குவிந்தனர். கட்டுக்கடங்காமல் குவிந்த கூட்டத்தால் பெங்களூர் நகரம் திக்குமுக்காடியது. மைதனாத்தை சுற்றி முழுவதும் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்தனர். போலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 11 பேர் உயிரிழப்பு இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் ஸ்டேடியத்தின் 7வது கேட் பகுதியில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரசிகர்கள் பலர் சிக்கி காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட வழங்க முடியாத நிலை இருந்தது. இவ்வாறாக கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த இந்த துயர சம்பவம் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.