கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

விசாகப்பட்டினம், ஜன. 30- நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக நேற்று முன்​தினம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 50 ரன்​கள் வித்தியாசத்​தில் தோல்வி அடைந்​தது. 216 ரன்​கள் இலக்கை துரத்திய இந்​திய அணி 18.4 ஓவர்​களில் 165 ரன்களுக்கு ஆட்ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஷிவம் துபே 23 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் விளாசி​னார். ரிங்கு சிங் 30 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​கள் சேர்த்​தார்.
அபிஷேக் சர்மா 0, கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 8, ஹர்​திக் பாண்​டியா 2 ரன்​களில் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தனர். சஞ்சு சாம்​சன் 15 பந்​துகளில் 24 ரன்​கள் சேர்த்த நிலை​யில் மிட்​செல் சாண்ட்​னர் பந்​தில் எளி​தாக போல்​டா​னார். இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி 6 பேட்​ஸ்​மேன்​கள், 5 பிர​தான பந்து வீச்​சாளர்​களு​டன் களமிறங்​கியது. இஷான் கிஷனுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்ட நிலை​யில் டாப் ஆர்​டர் பேட்​ஸ்​மேன்​களிடம் இருந்து சிறப்​பான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. நடு ஓவர்​களில் ஷிவம் துபே அதிரடி​யாக விளை​யாடி​னார். ஆனால் மறு​முனை​யில் அவருக்கு உறு​துணை​யாக மட்டையை விளாசும் வகை​யில் எந்த பேட்​ஸ்​மேனும் இல்லாதது பின்​னடை​வாக அமைந்​தது. ஷிவம் துபே ஆட்டமிழந்த பின்​னர் முழு​மை​யாக 5 ஓவர்​கள் மீதம் இருந்தன. ஆனால் பின்​வரிசை பேட்​டிங்​கில் அனைத்​துமே பந்​து​வீச்​சாளர்​களாக இருந்​த​தால் அவர்​களிடம் இருந்து பெரிய அளவி​லான தாக்​குதல் ஆட்​டம் வெளிப்​பட​வில்​லை. விசாகப்​பட்​டினம் போட்​டிக்கு பின்​னர் இந்​திய அணி​யின் கேப்​ட​னான சூர்​யகு​மார் யாதவ் கூறிய​தாவது: நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான 4-வது டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 6 பேட்​ஸ்​மேன்​களு​டன் விளை​யாட வேண்​டும் என்ற திட்​டத்​துடன்​தான் களமிறங்​கினோம்.