சட்ட சபையில் கடும் அமளி

பெல்காம், டி.16-
கர்நாடக மாநிலத்தில் வக்ஃப் போர்டு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு அறிக்கை விவகாரம் இன்று பெலகாவி ஸ்வர்ண சவுதா சட்டமன்றத்தில் பேதும் புயலைக் கிளப்பியது.காங்கிரஸ் பிஜேபி உறுப்பினர்கள் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் அமளி நிலவியது.
கர்நாடக மாநிலத்தில் பிஜேபி ஆட்சி காலத்தில் முதலமைச்சர் ஆக எதிர்பா இருந்தபோது விஜயந்திரா
சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் அன்வர் மணிப்பாடியை அவரது வீட்டில் வக்ஃப் ஆக்கிரமிப்பு குறித்து வெளியே சொல்லாமல் மவுனம் காக்க வேண்டும் என்றும் அதற்காக ரூ150 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக பேரம் பேசியதாக அமைச்சர் பிரியங்கா கார்கே குற்றச்சாட்டு கூறியிருந்தார்
இந்த விவகாரம் சட்டசபையில் இன்று புயலை கிளப்பியது பிஜேபி உறுப்பினர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து ஆவேசமாக பேசினர் இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பதிலடி கொடுத்தனர் இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது எந்த விசாரணைக்கும் தயார் சிபிஐ விசாரணைக்கு அரசாங்கம் பரிந்துரை செய்ய தயாரா என்று பிஜேபி சவால் விடுத்ததுபாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரர் தன் மீதான குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்த வேண்டும், என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் போர்க்கொடி எழுப்பினர். எதிர்க்கட்சியினரின் சவாலை ஏற்காத ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் சபையில் குழப்பமான சூழல் ஏற்பட்டது.சட்டசபையில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், சபாநாயகர் யு.டி. காதர் வட கர்நாடகம் தொடர்பான விவாதத்தை எடுக்கவிருந்தபோது, ​​எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் வட கர்நாடகா விஷயத்தை எடுத்துக் கொண்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் பிரியங்கா கார்கே நமது மாநிலத் தலைவர் விஜயேந்திரா தொடர்பாக கூறியுள்ள குற்றச்சாட்டு ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.அது குறித்து இந்த அவையில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.இது தொடர்பாக நாங்கள் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்
அப்போது தலைவர் யு.டி. காதர் பிற்பகலில் இதுபற்றி விஜயேந்திரர் பேச அனுமதிப்பதாக கதர் கூறியதும், இதற்கு உடன்படாத எதிர்க்கட்சித் தலைவர்கள் நீண்ட நேரம் விவாதிக்க வாய்ப்பளிக்கவில்லை. விவாதத்துக்கு அனுமதி கேட்டபோது சபாநாயகர் அதற்கு ஒப்புக்கொண்டார்.
சபாநாயகர் அனுமதிக்கு பின் பேசிய பா.ஜ.,வை சேர்ந்த விஜயேந்திரர், நேற்று சட்டசபை கூடிய போது, ​​நான் இல்லாத நேரத்தில், அமைச்சர் பிரியங்கா கார்கே, 150 கோடி ரூபாய், கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். முதல்வர் சித்தராமையாவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் நலனை விட்டுவிட்டு வேறு வேலைகளில் மும்முரமாக இருக்கிறீர்கள்
சிறுபான்மை ஆணைய முன்னாள் தலைவர் அன்வர் மணப்பாடி, மூலம் வக்ஃப்பை அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் சூறையாடினர் என்று கடுமையாக பேசினார்.இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது