
பீஜிங், அக். 20- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார். இதில் அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். 2-வது செட்டை ரிபாகினா 6-0 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து 3-6, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி ரிபாகினா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.