
நியூயார்க், ஜூன் 27- சீனாவுடன் அரிய கனிமங்கள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக போர் முடிவிற்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அன்று சீனாவுடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் “மிகப் பெரிய” ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் சூசகமாக தெரிவித்தார். பிக் பியூட்டிஃபுல் பில் நிகழ்வில் உரையாற்றிய டிரம்ப், வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசியபோது, “ நாங்கள் நேற்று சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். மிகச் சிறந்த ஒப்பந்தங்கள் இதில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அடுத்து இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் வரவுள்ளது.. இது மிக முக்கியமானதாக இருக்கும். எங்களின் வர்த்தகம் இதில் புதிய நிலையை அடையும்.