
பெய்ஜிங், ஜூன் 5- சீனா திடீரென கிரிட்டிக்கல் மினரல் (critical mineral exports) மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள் குறித்து உலகெங்கும் கவலை எழுந்துள்ளன. இது ஒட்டுமொத்தமாக உலகின் பல நாடுகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு அரசுகளுமே கூட எச்சரிக்கை விடுத்துள்ளன. சீனாவில் மக்களாட்சி இல்லை. அங்கு ஜி ஜின்பிங் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறையே இருக்கிறது. இதனால் சீனா திடீர் திடீரென பல நடவடிக்கைகள் எடுக்கும். இது பல நேரங்களில் உலக நாடுகளுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும். அதுபோல தான் சீனா இப்போது மீண்டும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. சீனா கட்டுப்பாடு அதாவது சீன அரசு திடீரென கிரிட்டிக்கல் மினரல் (critical mineral exports) மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. காந்தங்கள் உட்படப் பல பலவற்றின் ஏற்றுமதிகளுக்குச் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது மின்சார மற்றும் பெட்ரோல் வாகனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகளுக்கு முக்கியமானதாக உள்ளது. இதற்குச் சீனா திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் 4ம் தேதியே அமலுக்கு வந்தாலும் இப்போது தான் அதன் பாதிப்புகள் தெரியத் தொடங்கியுள்ளன. சீனா இப்போது மொத்தம் ஏழு அரிய பூமி தனிமங்கள் (REEs) மற்றும் அதனுடன் தொடர்புடைய காந்தங்களை ஏற்றுமதி செய்யச் சிறப்பு ஏற்றுமதி உரிமங்களைக் கட்டாயமாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பைக் காரணமாகச் சொல்லி அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. என்ன மினரல்கள்? அதில் சமாரியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடேடியம், ஸ்காண்டியம் மற்றும் இட்ரியம் உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் மின்சார மோட்டார்கள், பிரேக்கிங் சிஸ்டம்ஸ், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு முக்கியமானதாக உள்ளது. உலகின் REEகளில் சுமார் 60%ஐ சீனா உற்பத்தி செய்கிறது. மேலும், அரிய மினரல்களின் சுத்திகரிப்பிலும் சுமார் 90%ஐக் கட்டுப்படுத்துகிறது. இதனால் அனைத்து நாடுகளில் உள்ள நிறுவனங்களும் சீனாவையே சேர்ந்து இருந்தன. அவை இப்போது கடும் பாதிப்புகளையும் சந்திக்கத் தொடங்கியுள்ளன. சர்வதேச அளவில் பல நிறுவனங்களும் இதனால் பல்வேறு நிறுவனங்களும் பாதிக்கத் தொடங்கியுள்ளதால் சர்வதேச அமைப்புகள் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவை வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் சீன அதிகாரிகளுடன் அவசர மீட்டிங்குகளை நடத்தி தேவையான உரிமைகளை அவசர அவசரமாகப் பெற முயன்று வருகிறார்கள்.