சென்னையில் கவர்னர் மாளிகை உட்பட 9 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: அக்டோபர் 11-
ஆளுநர் மாளி​கை, ஐடி நிறு​வனங்​கள் உட்பட சென்​னை​யில் ஒரே நாளில் 9 இடங்​களில் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்​னை​யில் கடந்த சில நாட்​களாக உயர் நீதி​மன்​றம், விமானநிலை​யம், ஆளுநர் மாளி​கை, அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வீடு, திரைப் பிரபலங்​கள் மற்​றும் முக்​கிய பிர​முகர்​களின் வீடு​களுக்கு தொடர்ச்​சி​யாக மின்​னஞ்​சல் மூலம் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது.
இதையடுத்​து, மோப்ப நாய் மற்​றும் வெடிகுண்டு நிபுணர்​கள் உதவி​யுடன் போலீ​ஸார் தீவிர சோதனை​யில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனை​யில் வெடிகுண்டு ஏது சிக்​காத​தால், இது வெறும் புரளி எனத் தெரிய​வந்​தது. பின்​னர், போலீ​ஸார் அங்​கிருந்து புறப்​பட்​டுச் சென்​றனர்.
இதே​போல், ஈக்​காட்​டுத்​தாங்​கலில் உள்ள தனி​யார் தொலைக்​காட்சி அலு​வல​கம், கிண்டி ஆளுநர் மாளி​கை, கோடம்​பாக்​கத்​தில் உள்ள செய்தி நிறுவனம், முன்​னாள்
டிஜிபி தேவாரம் வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஜிஎஸ்டி அலு​வல​கம், சூளைமேட்​டில் மூத்த பத்திரி​கை​யாளர் மணி வீடு, சோழிங்​கநல்​லூர் மற்​றும் துரைப்​பாக்​கத்​தில் 2 ஐடி நிறு​வனங்​கள் என மொத்​தம் 9 இடங்​களுக்கு நேற்று அடுத்​தடுத்து வெடிகுண்டு மிரட்​டல் விடுத்து மின்​னஞ்​சல்​கள் வந்​தன.
அனைத்து இடங்​களி​லும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்​கள் உதவி​யுடன் போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்டனர். போலீ​ஸாரின் தீவிர சோதன​யில் எந்த இடத்​தி​லும் வெடி குண்டு ஏதும் சிக்​க​வில்​லை. எனவே வெடிகுண்டு மிரட்​டல் வெறும் புரளி எனத் தெரிய​வந்தது. இந்​நிலை​யில், வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்ட மின்​னஞ்​சல் முகவரியை வைத்​து, போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசாரித்து வரு​கின்​றனர்.