சைப்ரஸ், கனடா, குரேஷியா நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

புதுடெல்லி, ஜூன் 16- அரசு​முறை பயண​மாக பிரதமர் மோடி நேற்று சைப்​ரஸ் நாட்​டுக்கு புறப்​பட்டு சென்​றார். சைப்​ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடு​களில் அவர் 5 நாள் பயணம் மேற்​கொள்​கிறார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் கொல்​லப்​பட்​டனர். அதற்கு பதிலடி​யாக, பாகிஸ்​தானில் உள்ள விமானப்​படை தளங்​கள் மற்​றும் தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது. இதை தொடர்ந்​து, இந்​தி​யா​வின் பல்​வேறு கட்​சிகளை சேர்ந்த எம்​.பி.க்​கள் குழு​வினர் உலகின் பல்​வேறு நாடு​களுக்​கும் சென்​று, பாகிஸ்​தானின் எல்லை தாண்​டிய தீவிர​வாதம் குறித்து நேரடி​யாக விளக்​கம் அளித்​தனர்.
இந்​நிலை​யில், பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு முதல்​முறை​யாக பிரதமர் மோடி வெளி​நாட்டு பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.இதுகுறித்து பிரதமர் மோடி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சர்​வ​தேச அளவில் உள்ள பிரச்​சினை​கள் குறித்து கருத்​துகளை பரி​மாறிக்​கொள்ள, கனடா​வில் நடை​பெறும் ஜி7 மாநாடு இடமளிக்​கும் என்று நம்​பு​கிறேன். ஜி7 மாநாட்​டின்​போது பல்​வேறு நாட்டு தலை​வர்​களை சந்​திக்க ஆர்​வ​மாக இருக்​கிறேன். மேலும், இந்​தி​யா​வின் தீவிர​வாத எதிர்ப்​புக்கு ஆதரவு அளித்த நாடு​களுக்கு நன்றி தெரிவிக்க ஒரு வாய்ப்​பாக​வும் எனது பயணம் அமை​யும். குறிப்​பாக, சைப்​ரஸ் நாடு இந்​தி​யா​வுடன் மிக நீண்ட கால​மாகவே நல்​லுறவுடன் இருக்​கிறது. இந்​தி​யா​வுடன் நட்பு நாடாக​வும், மத்​திய கிழக்கு மற்​றும் ஐரோப்​பிய யூனியனில் மிக முக்​கிய நாடாக​வும் உள்​ளது. இந்த நாட்​டுட​னான வர்த்​தகம், முதலீடு, பாது​காப்​பு, தொழில்​நுட்​பம், பரஸ்​பரம் பொது​மக்​கள் சந்​திப்பு போன்​றவற்றை மேம்​படுத்த எனது பயணம் மிக​வும் உதவும்.
குரேஷிய அதிபர் ஜோரன் மிலனோவிக், பிரதமர் ஆண்ட்​ரேஜ் பிளன்​கோவிக் ஆகியோரை​யும் சந்​திக்க உள்​ளேன். இந்​தி​யா​வும், குரேஷி​யா​வும் 100 ஆண்​டு​களுக்கு மேல் நெருங்​கிய கலாச்​சார உறவு​களை கொண்​டுள்​ளது. இந்​திய பிரதமர் என்ற முறை​யில் முதல்​முறை​யாக குரேஷியா செல்​வ​தால், அந்த நாட்​டுடன் புதிய அத்​தி​யா​யம் தொடங்​கப்​படும். இருதரப்பு உறவு​களை மேம்​படுத்த இந்த பயணம் உதவும். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.