சொத்து குவிப்பு: அமைச்சர்ஜமீர் அகமதுவிற்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ்

பெங்களூரு, நவ. 16:
அமைச்சர் ஜமீர் அகமது சட்ட விரோத சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டிச. 3-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லோக்ஆயுக்தா டிவைஎஸ்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஈடி சோதனைக்குப் பிறகு, ஜமீர் மீது சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோத வருமானம் குறித்து விசாரணை நடத்த ஈடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக ஆவணம் சமர்ப்பிக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இப்போது ஆஜராகி அறிக்கை பதிவு செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.