ஜெர்மனியிடம் கையேந்தும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், ஜூன் 11- ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை பிரமோஸ் ஏவுகணை கொண்டு நம் நாடு தாக்கியது. பிரமோஸ் ஏவுகணை அடித்த அடியில் அலறிய பாகிஸ்தான் நம் நாட்டிடம் சரணடைந்தது. இந்நிலையில் தான் நம் நாட்டின் பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதலை தடுக்க ஜெர்மனி மற்றும் இத்தாலியிடம் உதவி கோர பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஜெர்மனியின் IRIS- T வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை வாங்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். அதன்பிறகு நம் நாடு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த மாதம் 7 ம் தேதி இரவில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதேபோல் கடந்த மாதம் 10ம் தேதி விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் என்று மொத்தம் 12 இடங்களை நம் நாடு அழித்தது. பாகிஸ்தான் மீதான இந்த தாக்குதலுக்கு நம் நாடு கையில் எடுத்த ஆயுதம் பிரமோஸ் ஏவுகணையாகும். நம் நாட்டிடம் இருக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை இதுவாகும். ரஷ்யா – நம் நாடு இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்தது. இந்த ஏவுகணையை வைத்து தான் ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானை கதிகலங்க வைத்தது நம் நாடு. அதுமட்டுமின்றி பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் நம்மிடம் மண்டியிட்டது. மோதல் முடிவுக்கு வந்தது.