டிரம்ப்பை திக்க வைத்து.. தண்ணி குடிக்க வைத்த இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட்

மாஸ்கோ, ஆகஸ்ட் 8- கிரெம்ளினில் ரஷ்ய அதிபர் புடின் உடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு நடத்தி உள்ளார். இந்தியா மீது ட்ரம்பின் 50% வரி விதிப்புக்கு அடுத்த நாளே இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க மாஸ்கோ சென்றுள்ளார். அமெரிக்கா-இந்தியா உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க அச்சுறுத்துகிறது. இந்தியா ரஷ்ய எண்ணெய் கொள்முதலை உடனே நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். இந்தியா மீது கூடுதல் வரி டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய் கொள்முதல்: அமெரிக்கா – இந்தியா பதற்றம் இந்திய ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த மறுக்கிறது. இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. அதை அதிக லாபத்திற்கு வெளிச்சந்தையில் விற்கிறது. இதனால் வரி கணிசமாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து கொள்முதல் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டெல்லி, ரஷ்ய எண்ணெய்க்கான இறக்குமதியை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்த விளக்கம் வந்துள்ளது.