டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆடையை களைந்து போராட்டம்

புதுடெல்லி: பிப்ரவரி 21
டெல்​லி​யில் நடை​பெறும் செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாட்​டில் நேற்று காங்​கிரஸ் தொண்​டர்​கள் மேலாடையை களைந்து போராட்​டம் நடத்​தினர்.
கடந்த 16-ம் தேதி தலைநகர் டெல்​லி​யில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு தொடங்​கியது. இந்த மாநாடு ஒட்​டுமொத்த உலகத்​தின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது.
இந்த சூழலில் 5-வது நாளாக நேற்று ஏஐ உச்சி மாநாடு நடை​பெற்​றது. அப்​போது இளைஞர் காங்​கிரஸை சேர்ந்த சிலர் அரங்​கம் 5-ல் திடீரென நுழைந்​தனர். பிரதமர் நரேந்​திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்​படங்​கள் அச்​சிடப்​பட்ட டி சர்ட்​களை அவர்​கள் அணிந்​திருந்​தனர். அந்த டி சர்ட்​களில், இந்​திய, அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தம், எப்​ஸ்​டீன் பைல் உள்ளிட்ட வாசகங்​கள் இருந்தன.
திடீரென இளைஞர் காங்​கிரஸ் தொண்​டர்​கள் டி சர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதி​ராக​வும் இந்​திய, அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தத்​துக்கு எதி​ராக​வும் கோஷமிட்​டனர். போராட்​டத்​தில் ஈடு​பட்ட காங்​கிரஸ் தொண்​டர்​களை டெல்லி போலீ​ஸார் கைது செய்து அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தினர். பின்​னர் அவர்​கள் விடுவிக்​கப்​பட்​டனர்.பாஜக கண்​டனம்: மத்​திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​தி​யா​வின் புகழுக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் வகை​யில் காங்​கிரஸ் தொண்​டர்​கள் ஏஐ உச்சி மாநாட்​டில் போராட்​டம் நடத்தி உள்​ளனர். அவர்​களது நடவடிக்​கையை இந்​தியா மட்​டுமல்ல, ஒட்​டுமொத்த உலக​மும் பார்த்​தது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.