டெல்லி பயங்கரவாதிகள் கோவைக்கு வந்தனரா – விசாரணை தீவிரம்

கோவை: நவ. 14-
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்​பவத்​தில் கைதானவர்​கள் கோவைக்கு வந்து சென்​றனரா என்று போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். டெல்​லி​யில் செங்​கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர்.கோவை​யில் 2022-ல் இதே​போல கார் வெடித்​துச் சிதறியது. இதில் காரை ஓட்​டிச்​சென்ற ஜமேசா முபின்​(28) என்​பவர் உயி​ரிழந்​தார். விசா​ரணை​யில், அவருக்​கும் ஐ.எஸ். பயங்​கர​வாத இயக்​கத்​துக்​கும் தொடர்பு இருந்​தது தெரிய​வந்​தது.
அவரது வீட்​டில் வெடிபொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. மேலும், கோவை சம்​பவம் தொடர்​பாக 18 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை என்ஐஏ அதி​காரி​கள் தீவிர​மாக விசா​ரித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், டெல்லி கார் வெடிப்பு சம்​பவத்​தில் கைதானவர்​களிடம் என்ஐஏ அதி​காரி​கள் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதற்​கிடையே, அந்த கும்​பல் கோவை வந்து சென்​றுள்​ளார்​களா என்​பது குறித்து என்ஐஏ அதி​காரி​களிடம், கோவை மாநகர போலீ​ஸாரிடம் விவரம் கேட்​டுள்​ளனர்.இதுகுறித்து கோவை மாநகர போலீ​ஸார் கூறிய​தாவது: கோவை​யில் 2022-ல் நடந்த கார் வெடிப்பு சம்​பவ​மும், தற்​போது டெல்​லி​யில் நடந்த சம்​பவ​மும் ஒன்​று​போலவே உள்​ளது. காரை மக்​கள் நடமாட்​டம் அதி​க​முள்ள பகு​தி​யில் நிறுத்​தச் சென்​ற​போது முன்​கூட்​டியே வெடித்​துள்​ளது. எனவே, டெல்லி சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்டு உள்ள நபர்​களின் விவரங்​களை என்​ஐஏ-​விடம் கேட்​டுள்​ளோம்.
அவர்​கள் கோவைக்கு வந்து சென்​றனரா அல்​லது கோவை​யில் உள்ள தடை செய்​யப்​பட்ட இயக்க ஆதர​வாளர்​கள் யாரும் அவர்​களை சந்​தித்து உள்​ளனரா என்​பது குறித்​தும் கேட்​டுள்​ளோம். கோவை​யில் கார் வெடிப்பு சம்​பவம் நடந்​ததற்கு பிறகு சந்​தேக நபர்​கள் என்று 140 பேர் கொண்ட பட்​டியல் தயார் செய்​யப்​பட்​டு, அவர்​களை ரகசி​ய​மாக கண்​காணித்து வரு​கிறோம். கோவை​யில் செயல்​பட்டு வரும் தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸாரும் இது தொடர்​பாக கண்​காணித்து வரு​கின்​றனர். மேலும், அந்த 140 பேரின் நண்​பர்​கள் சமூக வலை​தளத்​தில் பதிவேற்​றம் செய்​யும் கருத்​துகள், அவர்​களின் செல்​போனுக்கு வரும் அழைப்​பு​கள் உள்​ளிட்​ட​வற்​றை​யும் கண்​காணித்து வரு​கிறோம். இவ்​வாறு போலீ​ஸார் தெரி​வித்​தனர்​.