தமிழ்நாட்டை நெருங்கிய வங்கக்கடல் புயல் சின்னம்

சென்னை:நவ. 13: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது; காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து கரையை கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். இந்த தாழ்வு பகுதியின் மையம் தற்போது எங்கே உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது. இந்த தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர தொடங்கி உள்ளது. அதாவது வடக்கு தமிழகம் – தெற்கு ஆந்திர பிரதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த தாழ்வு பகுதி எங்கே செல்கிறது.. எங்கே இருக்கிறது என்ற புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இந்த புயல் சின்னம் உள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.