தரையில் புரண்டு கதறிய தலைவர்

பாட்னா: அக்.20-
ராஷ்டிரிய ஜனதா தள தலை​மை​யிடம் ரூ.2.7 கோடி லஞ்​சம் கொடுத்​தும் சீட் தரவில்லை என்று அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் மதன் ஷா குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.
இதுதொடர்​பாக கட்சித் தலை​வர் லாலு​வின் வீட்​டின் முன்பு அவர் சட்​டையை கிழித்​து, தரை​யில் புரண்டு கதறி அழு​தார். பிஹாரின் மதுபனி பகு​தியை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) மூத்த தலை​வர் மதன் ஷா. இவர் மதுபனி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் ஆர்​ஜேடி சார்​பில் போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​திருந்​தார். ஆனால் அவருக்கு சீட் வழங்​கப்​பட​வில்​லை.
இதனால் அதிருப்தி அடைந்த அவர் பாட்​னா​வில் உள்ள ஆர்​ஜேடி தலை​வர் லாலு பிர​சாத்​தின் வீட்​டுக்கு நேற்று சென்​றார். பாது​காவலர்​கள் அவரை உள்ளே விட​வில்​லை. இதனால் ஆத்​திரமடைந்த அவர், சட்​டையை கிழித்து சாலை​யில் உருண்டு, புரண்டு போராட்​டம் நடத்​தி​னார்.
இதுகுறித்து நிருபர்​களிடம் அவர் கூறிய​தாவது: மதுபனி தொகு​தி​யில் போட்​டி​யிட கட்​சித் தலைமை என்​னிடம் ரூ.2.7 கோடி கேட்​டது. எனது பிள்​ளை​களின் திரு​மணத்தை நிறுத்​தினேன். எனக்கு சொந்​த​மான நிலத்தை விற்​றேன். இவற்​றின் மூலம் கிடைத்த பணத்தை கட்சி தலை​மை​யிடம் செலுத்​தினேன். ஆனால் எனக்கு சீட் வழங்​க​வில்​லை.
துலு சமு​தா​யத்தைச் சேர்ந்த எனக்கு தேர்​தலில் போட்​டி​யிட நிச்​ச​யம் வாய்ப்பு வழங்​கு​வ​தாக லாலு​வும் அவரது மகன் தேஜஸ்​வி​யும் உறுதி அளித்​திருந்​தனர். ஆனால் இரு​வரும் என்னை ஏமாற்​றி​விட்​டனர். இவ்​வாறு மதன்​ ஷா தெரி​வித்​தார்​.