தினேஷ் பீடி உரிமையாளரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட மகன்

புதுடெல்லி: நவம்பர் 4-
உத்தர பிரதேசத்​தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்​வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறு​வி​னார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்​கண்ட், மத்​திய பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களுக்​கும் விரிவுபடுத்​தி​னார். புற்று நோயால் பாதிக்​கப்​பட்ட சுரேஷ் சந்த் அகர்​வால், உத்தர பிரதேசத்​தின் விரிந்​தாவன் நகரில் வசித்து வந்​தார்.இந்​நிலை​யில், சுரேஷ் சந்த் அகர்​வாலை அவரது மகன் இரு தினங்​களுக்கு முன்பு துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​றார். பின்​னர் அதே துப்​பாக்​கி​யால் தானும் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.
இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “சுரேஷ் சந்த் மகன் நரேஷ் அகர்​வால் மது பழக்​கத்​துக்கு அடிமை​யாக இருந்​துள்​ளார். இதைக் கண்​டித்​த​தால் தந்தை மகன் இடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்​டுள்​ளது.
அந்த வகை​யில் ஆத்​திரமடைந்த நரேஷ் துப்​பாக்​கியால் தந்​தையை சுட்​டுள்​ளார். பின்​னர் அவர், அதே துப்​பாக்​கி​யால் தன்னை சுட்டு தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார்.
இதில் இரு​வரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்​’’ என்​றனர்​.