துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய எம்எல்ஏவுக்கு வலைவீச்சு

சண்​டிகர், செப்டம்பர் 3- பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோடி​யுள்​ளார். அவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப் பேரவை தொகு​தி​ ஆம் ஆத்மி எம்​எல்​ஏ​ ஹர்​மீத் பதன்​மஜ்​ரா மீது, ஒரு பெண் போலீ​ஸில் புகார் கொடுத்​திருந்​தார். அதில், ‘தனது மனை​வியை விவாகரத்து செய்​து ​விட்​ட​தாக பொய் சொல்லி எம்​எல்ஏ ஹர்​மீத் என்​னுடன் தொடர்பு வைத்​திருந்​தார். மேலும், என்னை பாலியல் வன்​கொடுமை செய்​ததோடு, மிரட்​டல், ஆபாச படங்​கள் போன்​றவற்றை அனுப்​பும் செயல்​களில் ஈடுபட்டார்” என்று குறிப்​பிட்​டிருந்​தார். அதன் அடிப்​படை​யில் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து ஹர்​மீத்தை நேற்​று, கர்​னால் என்ற இடத்​தில் கைது செய்​தனர். இதைத் தொடர்ந்து அவரை உள்​ளூர் போலீஸ் நிலை​யத்​துக்​கு, போலீஸ் அதி​காரி​கள் அழைத்து வந்​தனர். அங்கு அவரும், அவரது கூட்​டாளி​களும் போலீ​ஸார் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு 2 கார்​களில் தப்​பித்​துச் சென்​று​விட்​டனர்.