நடிகை பிரதியுஷா தற்கொலையில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை

டெல்லி: பிப்ரவரி 18-
தமிழில் விஜயகாந்தின் தவசி உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை பிரதியுஷா கடந்த 2002ம் ஆண்டில் காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். 24 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் நடிகை பிரதியுஷாவின் காதலன் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் நடிகை பிரதியுஷா. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தார். 1999ம் ஆண்டு தம்பி ராமையா இயக்கிய மனுநீதி படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தது தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு நடிகர் பிரபுவுடன் சூப்பர் குடும்பம், விஜயகாந்த்துடன் தவசி, ராமராஜனுடன் பொன்னான நேரம் உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வந்தது
காதல் பிரச்சனை இந்த சமயத்தில் தான் கடந்த 2002ம் ஆண்டில் அவர் தனது 22வது வயதில் திடீரென்று தற்கொலை செய்தார்.
இது தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது பிரதியுஷா, சித்தார்த் ரெட்டி என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இந்த காதலை சித்தார்த் ரெட்டியின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்கொலை இதனால் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 2002ம் ஆண்டில் பிரதியுஷா – சித்தார்த் ரெட்டி ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர். இதில் பிரதியுஷா இறந்தார். சித்தார்த் ரெட்டி உயிர் பிழைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவருக்கு இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சித்தார்த் ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்தது. இது கடந்த 2011ம் ஆண்டில் நடந்தது.