இட்டாநகர்: ஏப் 28-
அருணாச்சலப் பிரதேசத்தில் நாகா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். கடத்தப்பட்ட கட்டுமானத் தொழிலாளியை மீட்டனர். அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் வசித்து வந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 2 பேர் கடத்தப்பட்டனர். உளவுத்துறை தகவலின் பேரில், லாங்டிங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நாகா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.இதில், நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் ஒரு கட்டுமானத் தொழிலாளி மீட்கப்பட்டார். இரண்டாவது நபரைத் தேடும் பணி நடந்து வருகிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.