நிதிஷ் குமாரை இயக்கும் பாஜக:ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாட்னா: அக்.30-
பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரை ரிமோட் கன்ட்​ரோல் மூலம் பாஜக இயக்​கு​கிறது என்று ராகுல் குற்​றம் சாட்​டி​னார். காங்கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, பிஹாரின் முசாபர்​பூரில் நேற்று தேர்​தல் பிரச்சா​ரம் செய்​தார்.அப்​போது அவர் பேசி​ய​தாவது: பிஹாரில் நிதிஷ் குமார் முதல்​வ​ராக இருந்​தா​லும் உண்​மை​யான அதி​காரம் பாஜக​விடம் உள்​ளது. இங்கு நிதிஷ் குமாரின் முகம் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆனால் ரிமோட் கன்ட்​ரோல் பாஜக​வின் கைகளில் உள்​ளன.
மிக​வும் பின்​தங்​கிய மற்​றும் விளிம்​புநிலை சமூகங்​களின் குரல் ஒடுக்​கப்​படு​கிறது. சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும் என்று பிரதமர் முன்​னிலை​யில் மக்​களவை​யில் நான் பேசினேன். து பிரதமர் ஒரு வார்த்தை கூட பேச​வில்​லை. பாஜக சமூக நீதிக்கு எதி​ரானது.பிஹாரில் நிதிஷ் குமார் 20 ஆண்​டு​கள் ஆட்சி செய்த போதும் மக்​களுக்கு முன்​னேற்​றம் மறுக்​கப்​பட்​டுள்​ளது. பிஹாரி​களுக்கு எதிர்​காலம் இல்​லை. நிதிஷ் குமார் தன்னை மிக​வும் பின்​தங்​கிய சமூகத்தை சேர்ந்​தவ​ராக அடிக்​கடி கூறிக்​கொள்​கிறார். ஆனால் மக்​களின் அடிப்​படை தேவை​களை அவர் பூர்த்தி செய்​யத் தவறி​விட்​டார். கடந்த 20 ஆண்​டு​களில் பிஹாரில் கல்​வி, சுகா​தா​ரம் மற்​றும் வேலை​வாய்ப்​புக்​காக அவர் எது​வும் செய்​ய​வில்​லை.இவ்​வாறு அவர் பேசி​னார்.