பயங்கரவாத டாக்டர்களின் ‘நெட்ஒர்க்’ தென் மாநிலங்களில் உள்ளதா?

சென்னை: நவ. 13-
டெல்லி குண்டு வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​களின் நெட்ஒர்க் தொடர்பு​கள் தமிழகம், ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்பட தென் மாநிலங்​களில் உள்ளதா என மத்​திய உளவுப் பிரிவு போலீ​ஸார், மாநில உளவு பிரிவு போலீ​ஸாருடன் இணைந்து ரகசிய விசாரணையில் ஈடு​பட்​டு உள்ளனர்.
டெல்​லியில் செங்​கோட்டை அருகே திங்​கள்​கிழமை கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்​பில் 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். முன்​ன​தாக, பெண் மருத்​து​வர் உள்​ளிட்​டோர் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், பலர் தற்​போது கைது செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். இவர்​களில் பெரும்​பாலானோர் மருத்​து​வர்​கள். இவர்​கள் இந்த குண்டு வெடிப்​பின் பின்னணி​யில் இருந்​துள்​ளனர்.
பெரிய அளவில் படிக்​காத இளைஞர்​கள் தீவிர​வாத சித்​தாந்​தத்​தால் ஈர்க்​கப்​பட்​டு, மூளைச் சலவை செய்​யப்​பட்டு பயங்​கர​வாத செயல்​களில் பெரும்​பாலும் ஈடு​படுத்​தப்​படு​வார்​கள். ஆனால், டெல்லி குண்டு வெடிப்​பின் பின்​னணி​யில் லட்​சக்​கணக்​கில் சம்​பளம் பெற்று வரும் மருத்​து​வர்​கள் இருப்​பது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.
விவரங்கள் சேகரிப்பு: இந்த குண்டு வெடிப்​பின் பின்​னணி​யில் உள்​ளவர்​கள், நேரடி​யாக களத்​தில் இறங்​கிய​வர்​கள், மூளை​யாக செயல்​பட்​ட​வர்​கள், நிதி உதவி செய்​தவர்​கள், பொருளா​தார உதவி மற்​றும் தங்​கும் இடம் உள்பட பல்​வேறு வசதி​களை செய்து கொடுத்​தவர்கள் குறித்த பட்​டியலை என்​ஐஏ, மத்​திய உளவு, தீவிர​வாத தடுப்பு என பல்​வேறு பிரிவு போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர்.
இதற்​கிடை​யில், டெல்​லி​யில் வெடிகுண்டு வெடித்த அடுத்த விநாடியே தமிழக போலீ​ஸார் உஷார் அடைந்​தனர். சென்னை உள்பட தமிழகம் முழு​வதும் உள்ள ரயில், பேருந்​து, விமான நிலை​யங்​கள் மற்​றும் வணிக வளாகங்​கள், பொது மக்​கள் அதி​கம் கூடும் இடங்​கள், வழி​பாட்டுத் தலங்​கள், திரையரங்​கு​கள் உள்பட பல்​வேறு முக்​கிய இடங்​களில் சோதனை மேற்​கொண்டனர். அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடிய, விடிய வாகன சோதனை​யும் நடை​பெற்​றது. நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியும் முடுக்கிவிடப்பட்டது. ஒருங்கிணைந்து கண்காணிப்பு: இதன் தொடர்ச்​சி​யாக குண்டு வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​களின் வலைப்​பின்​னல் தொடர்​பு​கள் தமிழகம், ஆந்​தி​ரா, கர்​நாட​கா, தெலங்​கானா உள்பட தென் மாநிலங்​களில் உள்​ளதா என மத்​திய உளவு பிரிவு போலீஸாரும் மாநில உளவு பிரிவு போலீ​ஸாரும் ஒருங்​கிணைந்து ரகசிய விசா​ரணை மற்​றும் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.