பயணிகள் கடும் அவதி

சென்னை: பிப்ரவரி 25-
கடற்​கரை – செங்​கல்​பட்டு தடத்​தில் ரயில் சேவை மாற்​றத்​தால், கடும் சிரமத்தை சந்​தித்து வரும் நிலை​யில், மேலும் 45 ரயில் சேவை​கள் குறைக்​கப்​பட்​ட​தால் பயணி​கள் மிக​வும் அவதிப்​பட்​டனர். சென்னை எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி​யின் ஒரு பகு​தி​யாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்​பால அடித்​தளப் பணி​கள் நடை​பெறுகின்​றன.
இதனால், கடற்​கரை – செங்​கல்​பட்டு தடத்​தில் பிப்​.20-ம் தேதி முதல் ஏப்​.5-ம் தேதி வரை 44 மின்​சார ரயில்​களின் சேவை​ரத்து மற்​றும் சேவை​கள் மாற்றி அறிவிக்​கப்​பட்​டன.
அதைத் தொடர்ந்​து, எழும்​பூர் ரயில் நிலைய 5, 6-வது நடைமேடைகள் வழி​யாக மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. நடைமேடைகள் மாற்​றப்​பட்​ட​தால், இரு​மார்க்​கத்​தி​லும் மின்​சார ரயில்​கள் தாமத​மாகின்​றன.
இதனால் கடந்த 4 நாட்​களாகவே பயணிகள் சிரமம் அடைந்து வரு​கின்​றனர். நேற்று 5-வது நாளாக ஏற்​பட்ட மின்​சார ரயில்​கள் தாமதத்​தால் பெரும்​பாலான பயணிகள் திரிசூலம், பரங்​கிமலை, கிண்டி உள்​ளிட்ட ரயில் நிலை​யங்​களில் இறங்​கி, அரு​கில் உள்ள மெட்ரோ நிலை​யம் சென்​று, மெட்ரோ ரயில்​களில் பயணித்​தனர்.
இதனால், மெட்ரோ ரயில்​களில் பயணிகள் கூட்​டம் அலைமோ​தி​யது. இதற்​கிடை​யில், புறநகர் மின்​சார ரயில் சேவை இரு மார்க்​கத்​தி​லும் நேற்று மேலும் 45 சேவை​களைக் குறைத்து இயக்​கப்​படும் என சென்னை ரயில்வே கோட்​டம் அறி​வித்​தது.இருப்​பினும், பயணி​களின் சிரமத்​தைக் குறைக்க, சென்னை எழும்​பூர் – பரங்​கிமலை மற்​றும் கூடு​வாஞ்​சேரி, செங்​கல்பட்டு இடையே 26 கூடு​தல் மின்​சார ரயில் சேவை​கள் (மின்​சார ரயில் ஷட்​டில் சேவை​கள்) அறிவிக்​கப்​பட்டுள்​ளன. இந்த சிறப்பு ரயில்​கள் செல்​லும் போது இரு மார்க்​கத்​தி​லும் பல்​லாவரம், கோடம்​பாக்கம், நுங்​கம்​பாக்கம், சேத்​துப்​பட்டு ஆகிய நிலை​யங்​களில் நிற்​காது.கடற்​கரை – தாம்​பரம் இடையே இயக்​கப்​படும் ஏசி மின்​சார ரயில்​கள் வார ​நாட்​களில் முழு​மை​யாக ரத்து செய்​யப்​படு​கின்​றன. திரு​மால்​பூர் – அரக்​கோணம், கடற்கரை – அரக்​கோணம் விரைவு மின்​சார ரயில்​கள், செங்​கல்​பட்டு – கடற்​கரை பகுதி விரைவு மின்​சார ரயில்​கள் பரங்​கிமலை​யில் நின்று செல்​லும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.