பாகிஸ்தானின் எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

புதுடில்லி,மே 31 – பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் இன்று (மே 31) பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்தியா – பாக்., இடையே கடந்த 10ம் தேதி போர் நிறுத்தம் அமலானது. எனினும், இருநாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குஜராத், ராஜஸ்தான், ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில், இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற இருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நடக்கும்போது, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்று பயிற்சி அளிக்க பாதுகாப்பு ஒத்திகை நடக்க இருக்கிறது. இதற்கான, ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பயிற்சி மாலை 5:00 மணிக்குத் தொடங்கி பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும். ஜம்முவில், இரவு 8:00 மணி முதல் இரவு 8:15 மணி வரை மின் தடை செய்து பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.சண்டிகரில், கிஷன்கர் மற்றும் ஐடி பார்க் பகுதிகளில் இரவு 8:00 மணி முதல் இரவு 8:10 மணி வரை 10 நிமிட மின்தடை செய்யப்படும். அமிர்தசரஸ் பகுதியில், மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும்.அதைத் தொடர்ந்து இரவு 8:00 மணி முதல் 8:30 மணி வரை மின் தடை செய்யப்படும். இந்தப் பயிற்சியின் போது, ​​குடியிருப்பாளர்கள் விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.