பாகிஸ்தான் எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடித்த பிரம்மோஸ

டெல்லி, ஜூன் 2- இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது இந்தியா தனது அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணையைப் பயன்படுத்தியது. பாகிஸ்தான் சீக்கிரமே உடைந்து போக இந்த பிரம்மோஸ் ஏவுகணையும் ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்தது. இதற்கிடையே இந்த பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து இந்தியா இப்போது 5 கலக்கல் திட்டங்களைப் போட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மோஸ் ஏவுகணை பிரம்மோஸ் என்பது ஒரு சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும். இது ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மேலும், 400 கிமீ-க்கு அப்பால் இருக்கும் இலக்குகளைக் கூட துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாக இது இருக்கிறது. இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து இந்த பிரம்மோஸ் ஏவுகணையை டெவலப் செய்துள்ளது. இப்போது இந்த பிரம்மோஸ் ஏவுகணை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டே பாகிஸ்தானைத் தாக்கியது. அவர்களால் நமது பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியவில்லை. சீனா வான் பாதுகாப்பு அமைப்பைத் தாண்டி தாக்குதல் இதில் விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானிடம் சீன வான் பாதுகாப்பு அமைப்பு இருந்தது. ஆனாலும் அவர்களால் பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியவில்லை. இதுவே பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. இதற்கிடையே பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து இந்தியா போடும் சில திட்டங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. 1) இப்போது பிரம்மோஸ் ஏவுகணையால் 400 கிமீ வரை மட்டுமே சென்று தாக்க முடிகிறது. இதற்கிடையே 800 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு பிரம்மோஸ் வெர்ஷனை டெவலப் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2) மேலும், இப்போது வரை பிரம்மோஸ் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவ முடியாது. ஆனால், அப்படி நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் ஏவக்கூடிய ஒரு வேரியண்டையும் இந்தியா டெவலப் செய்து வருகிறது. மிகச் சீக்கிரமே அது தொடர்பாகச் சோதனை நடத்தப்படும் என்றும் அது விரைவில் பாதுகாப்புப் படையிலும் இணைத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.