பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

வாஷிங்டன், ஜூன் 5- பயங்கரவாத பிரச்சினையில் உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவ வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடனான சிக்கல்களை தணிப்பதில் ட்ரம்பின் பங்கைப் பாராட்டினார். மேலும், அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிப்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதப் போக்கை நிறுத்துவதற்கு உதவியதற்காக ட்ரம்ப் “புகழ் பெறத் தகுதியானவர்” என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் எதிரொலித்தார்.