பாடகர் ஜுபின் கார்க் மரண வழக்கு: 2 இசைக் கலைஞர்கள் கைது

புதுடெல்லி, அக். 4- அ​சாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்​பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்​களை கைது செய்து அசாம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க சிங்​கப்​பூர் சென்​றிருந்​தார். அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க ஒரு படகில் சென்​றுள்​ளார். கடலில் நீந்​தும் போது அவர் நீரில் மூழ்கி இறந்​தார்.
இச்​சம்​பவம் தொடர்​பாக ஜுபின் கார்க் மேலா​ளர் சித்​தார்த்த சர்​மா, நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர் சியாம்​கானு மகந்தா ஆகியோர் டெல்​லி​யில் கடந்த புதன் கிழமை கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்​கில் கொலை குற்​றச்​சாட்​டு​களை​யும் அசாம் சிஐடி போலீ​ஸார் சேர்த்​துள்​ளனர். இந்​நிலை​யில் ஜுபின் கார்க்​குடன், கடலுக்கு படகில் சென்ற இரண்டு இசை கலைஞர்​கள் சேகர்​ஜோதி கோசு​வாமி, அம்​ரித்​பிரவா மகந்தா ஆகியோரை அசாம் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து விசா​ரணைக்​காக குவஹாட்டி அழைத்து வந்​தனர்.
அவர்​கள் 14 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பப்​பட்​டனர். அவர்​களிடம் சிறப்பு புல​னாய்வு குழு​ வி​சா​ரணை நடத்தி வரு​கின்றனர்​.