சென்னை:செப். 24- 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன. தற்போது, 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள்அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில், அடுத்த மாதம் நடக்க உள்ள விழாவில், முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும். நடிகை சாய் பல்லவி, நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்தது.
 
