பிரபல ரவுடி படுகொலை – கொலையாளிகளுக்கு வலைவீச்சு

பெங்களூரு, ஜூன் 11-
பிரபல ரவுடி புனீத் என்கிற
நேபாளி புனீத் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். நடுரோட்டில் இவரை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற ஆசாமிகளைக் கைது செய்ய கடுகோடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடுகோடி காவல் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருந்த புனித் என்கிற நேபாளி புனித், நேற்று இரவு 9.45 மணியளவில் விஜயலட்சுமி காலனியில் சாலையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார் கொலையாளிகள் தப்பி சென்றனர்.
தகவல் கிடைத்ததும், கடுகோடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்தக் கொலையை காடுகோடி காவல் நிலைய ரவுடி ஷீட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் செய்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகித்தனர்.
ஸ்ரீகாந்துக்கும், ரவுடி புனீத்துக்கும் இடையே சின்னச் சின்ன விஷயங்களுக்காக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. புனித் ஸ்ரீகாந்தைக் கொன்றுவிடுவேன் என்று எல்லோருக்கும் முன்பாகச் சொல்லி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, காடுகோடியில் உள்ள விஜயலட்சுமி லேஅவுட் அருகே புனித் இருந்தபோது ஸ்ரீகாந் அரிவாளால் அவரைக் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. பைக்கில் வந்த நான்கு பேர் அவரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடுகோடி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.