பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி

பாரிஸ், ஜூன் 5- பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, 316-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் லோயிஸ் போய்சனுடன் மோதினார்.
2 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லோயிஸ் போய்சன் 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப், 7-ம் நிலை வீராங்கனையான சகநாட்டைச் சேர்ந்த மேடிசன் கீஸஸுடன் மோதினார்.
2 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோ கோ காஃப் 6-7 (6-8), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதியில் கால்பதித்தார்.