போதைப்பொருள் விவகாரத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் சிக்க வாய்ப்பு

சென்னை: ஜூன் 25-
போதைப் பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கைது செய்​யப்​பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அப்​போது தான் தவறு செய்​து​ விட்​ட​தாக அவர் கதறி அழு​தார். இந்த விவ​காரத்​தில் தமிழ் திரை​யுல​கின் முன்​னணி நடிகர் நடிகைகள் உட்பட பலரும் சிக்க உள்​ள​தாக​வும் அவர்​களின் பெயர் பட்​டியல் ரகசி​ய​மாக போலீ​ஸார் சேகரித்து வரு​வ​தாக​வும் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.
முன்​ன​தாக ஸ்ரீகாந்த் வீட்​டில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் போதைப் பொருள் காலி பாக்​கெட்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அவர் கைது செய்​யப்​பட்டு நேற்று முன்​தினம் இரவோடு இரவாக எழும்​பூர் நீதி​மன்ற மாஜிஸ்​திரேட் தயாளன் முன்​னிலை​யில் ஆஜர் செய்​யப்​பட்​டார். அப்​போது, அவர் மாஜிஸ்​திரேட்​டிடம், நான் தவறு செய்து விட்​டேன்.
எனது மகனை கவனிக்க வேண்​டி​யுள்​ளது. எனவே, எனக்கு ஜாமீன் தரு​மாறு கண்​ணீர் மல்க கோரிக்கை விடுத்​தார். போதைப் பொருள் தடுப்பு நீதி​மன்​றத்​தில் மனு​தாக்​கல் செய்​யு​மாறு கூறி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்க மாஜிஸ்​திரேட் உத்​தர​விட்​டார். சிறை​யில் முதல் வகுப்பு வழங்​க​வும் அனு​மதி அளித்​தார்.
முன்​ன​தாக நடிகர் ஸ்ரீகாந்த் போலீ​ஸாரிடம் அளித்த வாக்​குமூலம்: கடந்த 2002-ல் ரோஜா கூட்​டம் என்ற படத்​தில் நடித்​தேன். நடிப்​பில் உச்​சத்​தில் இருந்​த​போது சென்​னையைச் சேர்ந்த வந்​தனா என்ற பெண்​ணுடன் 2008-ல் திரு​மணம் நடை​பெற்​றது. தற்​போது 2 பிள்​ளை​கள் உள்​ளனர்.
இந்​நிலை​யில், என்னை வைத்து அதி​முக முன்​னாள் நிர்​வாகி பிர​சாத் ‘தீங்​கிரை’ என்ற படத்தை இயக்​கி​னார். ஒப்​பந்​தப்​படி முழு பணத்​தை​யும் அவர் தரவில்​லை. நாங்​கள் சந்​தித்​த​போதெல்​லாம் அவர் என்னை மது​பான கூடத்​துக்கு அழைத்​துச் செல்​வார். பின்​னர் போதைப் பொருள் கொடுத்​தார். கடன் உட்பட குடும்ப பிரச்​சினை​யால் போதைப் பொருளை அடிக்​கடி பயன்​படுத்த தொடங்​கினேன்.
அதன் பிறகு ஆப்​பிரிக்க போதைப் பொருள் கடத்​தல் மன்​னன் ஜான், சேலம் சங்​ககிரியைச் சேர்ந்த பிரதீப்​கு​மார் உள்​ளிட்ட மேலும் சிலரிடம் அடிக்​கடி நானே நேரடி​யாக​வும், பிற நபர்​கள் மூல​மாக​வும் போதை வஸ்​துவை வாங்​கினேன். நான் மட்​டும் அல்​லாமல் திரைத்​துறை​யில் 10-க்​கும் மேற்​பட்ட முன்​னணி நடிகர், நடிகைகளும் போதைப் பொருளை பயன்​படுத்தி வரு​கின்​றனர். நான் தவறு செய்​து​விட்​டேன். இவ்​வாறு கண்​ணீர் மல்க வாக்​குமூல​மாக அளித்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.இந்​தச் சூழலில் இந்த விவ​காரத்​தில் நடிகர் கிருஷ்ணா​வின் பெயரும் அடிபட்​டது. தற்​போது அவரது செல்​போன் சுவிட்ச் ஆப் செய்​யப்​பட்​டு, அவரும் தலைமறை​வாக உள்​ளார். அவரும் விரை​வில் கைது செய்​யப்பட வாய்ப்பு உள்​ள​தாக தெரி​கிறது. இதனிடையே போதைப் பொருட்​களையார் பயன்​படுத்​தி​னாலும் பாரபட்​சம் இன்றி நடவடிக்கை எடுக்​கப்​படும் என காவல் ஆணையர் அருண் எச்​சரித்​துள்​ளார். பாலிவுட்டை தொடர்ந்து தற்​போது தமிழ் திரை உலகிலும் போதைப்​பொருள் பயன்​பாடு விவ​காரம் புயலை கிளப்​பி​யுள்​ளது. தமிழ் திரைத்​துறை​யினர் பங்கேற்கும் கொண்​டாட்​டங்களில் நட்​சத்​திரங்​கள் சிலர் போதைப் பொருட்​களை பயன்​படுத்தி வரு​வது முதல்​கட்ட வி​சா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. அதி​லும் உச்ச நடிகரின் குடும்​பத்​தைச் சேர்ந்த இரு​வர் உட்பட போதைப் பொருட்​களை பயன்​படுத்தி வரும்​ நடிகர்​, நடிகை​களின்​ பெயர்​ பட்​டியலை போலீ​ஸார்​ ரகசி​ய​மாக சேகரித்​து வருகின்​றனர்​. முதலில் காங்கிரஸ், அடுத்து திமுக, இப்போது அதிமுக.. போதைப் பொருள் வழக்கில் அதிமுக தொழில் நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த பிரசாத் (33), கடந்த மாதம் 29-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பிரசாத், தொடக்ககாலத்தில் காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் நிர்வாகியாகவும் பதவி வகித்துள்ளார். அதன்பிறகே அதிமுகவில் சேர்ந்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 200 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த மதுரை ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஜானிடம் போதைப் பொருள் வாங்கி விற்பனை செய்துள்ளார். இதுதொடர்புடைய பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னணு தொழில்நுட்ப ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.