போன் போட்டு கேப்டன் பதவி வேண்டாம் என்றேன்: மனம் திறக்கும் ஜஸ்பிரீத் பும்ரா

லீட்ஸ், ஜூன் 18- ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜஸ்​பிரீத் பும்ரா ஸ்கை ஸ்போர்ட்ஸ் சானலுக்​காக முன்​னாள் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான தினேஷ் கார்த்​திக்​குடன் கலந்​துரை​யாடி​னார்.அப்​போது ஜஸ்​பிரீத் பும்ரா கூறிய​தாவது: டெஸ்ட் கேப்​ட​னாக நான் தேர்வு செய்​யப்​ப​டாத​தில் எந்த ஆடம்​பர​மான கதைகளும் இல்​லை. நான் நீக்​கப்​பட்​ட​தாக எந்த சர்ச்​சையோ அல்​லது தலைப்​புச் செய்​தியோ இல்​லை. ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறு​வதற்கு முன்​னர் ஐபிஎல் தொடரின் போது, இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எனது பணிச்​சுமை குறித்து பிசிசிஐ​யிடம் பேசினேன். அறுவை சிகிச்சை நிபுணர், பணிச்சுமை​களை நிர்வகிப்பதில் எந்த அளவுக்கு புத்​தி​சாலித்​தன​மாக இருக்க வேண்​டும் என்​ப​தைப் பற்றி எப்​போதும் என்​னிடம் கூறு​வார். இதன் பின்​னரே​நான் கொஞ்​சம்புத்​தி​சாலி​யாக இருக்க வேண்​டும் என்ற முடிவுக்கு வந்​தேன்.எனவே நான் பிசிசிஐ-க்கு போன் செய்​து, தலை​மைப் பொறுப்​பில் என்னை பார்க்க நான் விரும்​ப​வில்லை என்று கூறினேன். ஏனென்​றால் பணிச்​சுமை காரண​மாக 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைத்து ஆட்​டங்​களி​லும் என்​னால் விளை​யாட முடி​யாது என்​ப​தால் கேப்​ட​னாக இருக்க முடி​யாது. பிசிசிஐ என்னை தலைமை பண்​பில் அமர்த்த பார்த்​தது. ஆனால் அது அணிக்​கும் நியாயமற்​றது என்​ப​தால் நான் வேண்​டாம் என்று சொல்ல வேண்​டி​யிருந்​தது. 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில், மூன்று போட்​டிகளுக்கு வேறு ஒரு​வர் தலைமை தாங்​கு​வதும், இரண்டு போட்​டிகளுக்கு வேறு ஒரு​வர் தலைமை தாங்​கு​வதும் அணிக்கு நல்​ல​தாக இருக்​காது. டெஸ்ட் கிரிக்​கெட்​டில் இருந்து திடீரென விலக வேண்​டிய சூழ்​நிலை​யில் இருக்க நான் விரும்​ப​வில்​லை. கேப்​டன்சி என்​பது நிறைய அர்த்​தம் கொண்​டது. அதற்​காக நான் மிக​வும் கடின​மாக உழைத்​தேன். ஆனால், துர​திர்​ஷ்ட​வச​மாக, சில நேரங்​களில் நீங்​கள் பெரிய விஷ​யத்தை கவனிக்க வேண்​டும். எனக்கு கேப்​டன்​சியை விட கிரிக்​கெட்டை அதி​கம் பிடிக்​கும், அதனால் ஒரு கிரிக்​கெட் வீர​ராக​வும், ஒரு வீரராக இந்திய அணிக்கும் அதிக பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்.இவ்வாறு ஜஸ்பிரீத் பும்ரா கூறினார்.